75. அருள்மிகு விஜயராகவ பெருமாள் கோயில்
மூலவர் விஜயராகவ பெருமாள்
தாயார் மரகதவல்லித் தாயார்
திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்
விமானம் விஜயகோடி விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருப்புட்குழி, தமிழ்நாடு
வழிகாட்டி காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 11 கி.மீ. தொலைவு சென்று பாலுசெட்டி சத்திரம் அருகில் திருப்புட்குழி பெருமாள் கோயில் பெயர்ப்பலகை பார்த்து இடதுபுறம் திரும்பும் தெருவில் சென்றால் கோயிலை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Tiruputkuzhi Gopuram Tiruputkuzhi Moolavarஇத்தலத்தில் இராமபிரான் ஜடாயுவுக்கு தர்ப்பணம் செய்வதற்கு, பூமியில் குழி தோண்டி கங்கையை ஆவாஹனம் செய்து ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கியதாகவும், அதனால் இத்தலத்திற்கு திருபுள்குழி (புள் - ஜடாயு பறவை) என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மூலவர் விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மரகதவல்லித் தாயார் என்பது திருநாமம். ஜடாயுவுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Tiruputkuzhi Utsavarஇக்கோயிலில் உற்சவர் எழுந்தருளும் குதிரை வாகனம் உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது.

இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com